சினிமா செய்திகள்
ராஜூ, இமான் இருவருக்கும் தண்டனை கொடுக்க சொன்ன பிக்பாஸ்: என்ன காரணம்?
பிக்பாஸ் போட்டியாளர்களான ராஜு ஜெயமோகன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகிய இருவருக்கும் தண்டனை கொடுக்க பிக்பாஸ் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சியிலும் ஒருசில போட்டியாளர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனை நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோவில் தன்னுடைய கருத்தை தைரியமாக வெளியே சொல்ல முடியாத இரண்டு பேரை தேர்வு செய்யுங்கள் என பிக்பாஸ் தெரிவிக்கின்றார். இதனை அடுத்து சொல்லி வைத்தார் போல அனைத்து போட்டியாளர்களும் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சியை தேர்வு செய்கின்றனர்.
இதனால் ராஜு மற்றும் இமான் அண்ணாச்சிக்கு தண்டனை வழங்கும்படி பிக்பாஸ் உத்தரவிடுகிறார். இதனை அடுத்து கார்டன் ஏரியாவில் இருவரையும் உட்காரவைத்து அவர்களுடைய தலையில் தண்ணீரை சக போட்டியாளர்கள் ஊற்றும் தண்டனை வழங்கப்படுகிறது.
அப்போது ஜெயமோகன் ஆத்திரமாக செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என கூறுகிறார். அவர் யாரை நோக்கி இவ்வாறு ஆத்திரமாக சொன்னார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் இன்று அமைதியாகவும் நகைச்சுவையாகவும் இருந்த ராஜூ ஆவேசமாகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Day40 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/oEY0iU7nau
— Vijay Television (@vijaytelevision) November 12, 2021