தமிழ்நாடு

ரஜினி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம்!

Published

on

ரஜினி மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என்று ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.

நடகர் ரஜினிகாந்த அரசியல் பிரவேசம் வந்துவிட்டு உடல்நிலை காரணமாக பின்வாங்கி விட்டார். ஆனால் அவரது ரசிகர்களோ அரசியலுக்கு வா தலைவா என்று கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் மாற்று கட்சியில் சேரலாமா என்றெல்லாம் எண்ணி, வேறு வழியின்றி அமைதியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ‘ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக்கூடாது’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version