சினிமா செய்திகள்

கைதாகாமல் இருக்க ரூ.25 லட்சம் லஞ்சம் கொடுத்தாரா ராஜ் குந்த்ரா?

Published

on

ஆபாச பட வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க மும்பை போலீஸ் அதிகாரிகளுக்கு ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ரூபாய் 25 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டு செயலிகளுக்கு ஆபாச படங்களை தயாரித்து விற்பனை செய்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா மீது குற்றச்சாட்டு இருந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது போலீசாருக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளி என்று முடிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் ராஜ்குந்த்ரா தங்களை மிரட்டி ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக 3 நடிகைகள் புகார் அளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜ்குந்த்ரா எடுத்த ஆபாச படங்கள் வெளிநாட்டிற்கு விற்கப்பட்டது என்பதும் அவை வெளிநாட்டு ஆபாச செயலிகளில் பதிவேற்றப்பட்டது என்பதும் அதற்கான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் போலீசார் தன்னை கைது செய்யப் போகிறார்கள் என்று தெரிந்ததும் அவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் ராஜ்குந்த்ரா லஞ்சம் வழங்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து தனியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராஜ்குந்த்ராவுக்காக ஆபாச படங்கள் தயாரித்து கொடுத்த தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் புரோடக்சன் கம்பெனிகள் ஊழியர்கள் மீதும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version