சினிமா செய்திகள்
’சூர்யா 40’ படத்தில் ராஜ்கிரண்-சத்யராஜ் கேரக்டர்கள் என்ன? புதிய தகவல்!
சூர்யா நடிக்க இருக்கும் 40வது திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. சூர்யா தற்போது தான் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளதால் ஓய்வுக்குப் பின் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் மற்றும் சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் டி இமான் இந்த படத்தில் இசையமைக்க உள்ளார் என்பதும் ராண்டி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் ராஜ்கிரண் இணைந்தார் என்ற செய்தியைப் பார்த்தோம். தற்போது ராஜ்கிரன் மற்றும் சத்யராஜ் நடிக்க இருக்கும் கேரக்டர் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது. இரண்டு கிராமத்தின் பெரிய மனிதார்களாக ராஜ்கிரன் மற்றும் சத்யராஜ் நடிக்க இருப்பதாகவும் இரண்டு கிராமத்திற்கும் இடையே ஏற்பட்ட ஒரு முக்கிய பிரச்சனையை இருவரும் சேர்ந்து புத்திசாலித்தனமாக எப்படி தீர்த்து வைக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.