சினிமா செய்திகள்

தனது அடுத்த படத்தின் கதையை ஓகே செய்த ரஜினிகாந்த்… கதை இதுதான்…

Published

on

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, தீபிகா படுகோன் நடிப்பில் 2011ம் ஆண்டு உருவாகவிருந்த வரலாற்று படம் ராணா. ஆனால், பூஜை போட்ட அன்னைக்கே ரஜினிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அப்போது தான் ராணா கதையின் தொடர்ச்சியாக கோச்சடையான் படத்தை உறுவாக்கினார் ஐஸ்வர்யா ரஜினி. இதை மோஷன் கேப்ஷரிங் தொழில்நுட்பத்தில் உருவாக்கினர்.

பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ரஜினி மற்றும் கே.எஸ்.ரவிக்குமாரின் கனவுப் படமான ராணா மீண்டும் உருவாகும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.

உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் ரஜினியை சந்தித்து திரும்பி உள்ள இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ராணா படத்தின் கதையை மீண்டும் சொல்ல சொல்லி ரஜினி கேட்டதாக கூறியுள்ளார். கதையை கேட்ட ரஜினி ராணா மிகவும் நல்ல ஸ்கிரிப்ட் என பாராட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததும் அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களை முடித்துவிட்டு கண்டிப்பாக ராணா படத்தை இயக்கலாம் என ரஜினி உறுதி அளித்ததாகவும் கே.எஸ்.ரவிக்குமார் மகிழ்ச்சியுடன் கூறினார். இந்த செய்தி கே.எஸ்.ரவிக்குமாருக்கு மட்டும் இல்லை ரஜினியின் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்திதான்.

Trending

Exit mobile version