இந்தியா

ஸ்டாலினை அடுத்து இன்னொரு நபருக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நேற்று ஐந்து மாநிலங்களின் முடிவுகளும் வெளிவரத் தொடங்கின. தமிழகத்தில் திமுகவும், கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், புதுவையில் என் ஆர் காங்கிரஸ் கட்சியும், அஸ்ஸாமில் பாஜகவும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஐந்து மாநிலங்களிலும் இன்னும் ஒரு சில நாட்களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ள திமுகவுக்கும் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் அதன் பின்னர் தனது டுவிட்டரிலும் வாழ்த்து தெரிவித்தார் என்பதும் தெரிந்ததே. மேலும் ரஜினிகாந்த் வாழ்த்துக்கு தனது நன்றியை முக ஸ்டாலின் அவர்களும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிலையில் ஸ்டாலினை அடுத்து இன்னொரு பிரபலத்திற்கு ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர்தான் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்காக முதல்வர் மம்தா பானர்ஜி அவர்களை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version