சினிமா செய்திகள்
நான் கனவில் கூட நினைக்கவில்லை: எஸ்பிபி பாடல் குறித்து ரஜினிகாந்த் டுவிட்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படத்தில் சிங்கிள் பாடல் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. ரஜினிகாந்த் அறிமுக காட்சியின் பாடலான இந்த பாடலை வழக்கம்போல் எஸ்பி பாலசுப்ரமணியன் பாடியுள்ளார் என்பதும் எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த பாடல் குறித்து ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
ரஜினிகாந்தின் பெரும்பாலான படங்களின் அறிமுக பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் தான் பாடியுள்ளார் என்பதும் அவர் பாடிய கிட்டத்தட்ட அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ’அண்ணாத்த’ படத்தின் பாடலும் தற்போது மெகா ஹிட்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த்துக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த ட்விட்டை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த ட்விட்டை வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2021