தமிழ்நாடு
செய்தியாளர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!- ஏதேணும் முக்கிய அறிவிப்பா?
நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தனது 40-வது திருமண நாளை வருகிற பிப்ரவரி 26-ம் தேதி கொண்டாடுகிறார். வழக்கமாக ரஜினிகாந்த் பிறந்தநாள், திருமண நாள் என விசேஷ நாட்களுக்கு ரசிகர்களுக்கு ரஜினி வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து வாழ்த்து தெரிவிப்பர். அதேபோல் நாளை மறுநாள் ரஜினியை சந்திக்க வழக்கம் போல் வீட்டில் கூட்டம் கூடும். ரசிகர்களை சந்திக்க வெளியே வரும் போது நிச்சயமாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்புவார்கள்.
இந்த சூழலில் ரஜினியே இன்று செய்தியாளர்களைச் சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளார். நாளை மறுநாள் தனது திருமண நாளின் போதே சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவித்துள்ளார். தனது அரசியல் முடிவு, உடல்நலம் சார்ந்த ஓய்வு, தனது திரைப்படப் பயணம் ஆகியன குறித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு சில முக்கிய முடிவுகளும் அன்றைய தினம் வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது.