சினிமா செய்திகள்

தனுஷிடம் ரஜினிகாந்த் பேச்சுவார்த்தை நடத்தினாரா? என்ன நடந்தது?

Published

on

மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதற்கு முடிவெடுத்து அதை அறிவிக்கும் முன்னர் ரஜினிகாந்த் தரப்பில் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததை அடுத்தே பிரிவு முடிவு அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா உறவில் கடந்த சில ஆண்டுகளாகவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் அவ்வப்போது ரஜினிகாந்த் குடும்பத்தினர் மற்றும் கஸ்தூரிராஜா குடும்பத்தினர் சமாதானப்படுத்தியதாகவும், அதனால் இருவரும் சமாதானம் ஆகி குழந்தைகளுக்காக ஒன்றாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனுஷுக்கு பிரபல மலையாள நடிகை ஒருவர் நெருக்கமாக இருந்ததாக ஐஸ்வர்யாவின் காதுக்கு நேரடியாகவே செய்திவர இதுகுறித்து ஐஸ்வர்யா அந்த நடிகையிடம் நேரடியாகவே கேட்டு விட்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்த அந்த நடிகை தனுஷிடம் இது குறித்து கூற, தனுஷ் ஐஸ்வர்யா கருத்து வேறுபாடு பெரிதானதாக தெரிகிறது.

இது குறித்து இருவருமே நேரடியாக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டதாகவும் இதனை அடுத்து தான் இனிமேல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாது பிரிந்து விடுவோம் என்ற முடிவை எடுத்ததாக தெரிகிறது. இந்த முடிவை எடுத்த உடன் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து தனுஷ் கூறியதாகவும், ஆனால் ரஜினிகாந்த் இந்த முடிவுக்கு ஒப்புக்கொள்ளாமல் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழுங்கள் என்று இருவருக்கும் அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் இருவருமே பிரிவு முடிவில் பிடிவாதமாக இருந்ததை அடுத்து ரஜினி இந்த விஷயத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிற.து மேலும் பேச்சுவார்த்தை நடத்தி தன் மனதை மாற்றி விடுவார்கள் என்பதற்காக தனுஷ் கடந்த இரண்டு வாரங்களாக பக்கத்து மாநிலம் ஒன்றில் இருந்து வருவதாகவும் இதனை அடுத்து ரஜினி தனது பேச்சுவார்த்தையை நிறுத்தி விட்டதாகவும் தெரிகிறது.

இதன்பின்னர் தான் நேற்று இருவரும் தங்களது பிரிவை முறையாக அறிவித்து உள்ளதாகவும் மேலும் இருவரும் சட்ட ரீதியாக பிரிவதற்கான முயற்சிகளை இன்னும் ஓரிரு நாட்கள் செய்வார்கள் என்றும், ரஜினிகாந்தும் வேறுவழியின்றி இந்த முடிவை அமைதியாக ஏற்றுக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version