சினிமா செய்திகள்

’தலைவி 2’ எடுத்தா ரஜினி சொன்ன விஷயங்களையும் சேர்ப்போம்: மதன் கார்க்கி

Published

on

தலைவி படம் குறித்து ரஜினிகாந்திடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சில விஷயங்களை கூறினார் என்றும், ஒருவேளை தலைவி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அவர் சொன்ன காட்சிகளையும் படத்தில் இணைப்போம் என்று கவிஞர் மதன் கார்க்கி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தலைவி. இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்கு வசனம் எழுதிய மதன் கார்க்கி பேட்டி ஒன்றில் கூறியபோது ’சமீபத்தில்தான் ரஜினியை சந்தித்ததாகவும், அப்போது தலைவி படத்தில் குறித்து அவர் கேட்டதாகவும், ‘தலைவி’ படத்தில் என்னென்ன காட்சி வைத்திருக்கிறீர்கள் என்று ரஜினி கேட்டபோது, அது பற்றி நான் கூறியதாகவும் கூறினார்

அப்போது ரஜினி சில சம்பவங்களை கூறினார் என்றும், அவை மிகவும் சுவராசியமாக இருந்தது என்றும், ஒருவேளை தலைவி படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் அந்த காட்சிகளை எல்லாம் இணைக்கலாம் என்று தான் இயக்குனர் விஜய்யிடம் கூறியதாகவும் மதன் கார்க்கி அந்த பேட்ட்யில் தெரிவித்தார். தலைவி படம் குறித்து அப்படி என்ன ரஜினி கூறியிருப்பார்? என்பதை ஒருவேளை தலைவி இரண்டாம் பாகம் வந்தால் பார்ப்போம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான தலைவி படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் கங்கனா ரனாவத்தும், எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமியும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version