தமிழ்நாடு

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம்: 15 கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதில்!

Published

on

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய ஒரு கருத்துக்கு விளக்கம் கேட்டு அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் ஆணையம் ஏற்கனவே இரண்டு முறை சம்மன் அனுப்பியது. இரண்டு முறையும் நேரில் ஆஜராகாத ரஜினிகாந்த் எழுத்துபூர்வமாக கேள்விகளை அனுப்பினால் எழுத்துப்பூர்வமாக பதில் சொல்ல தயார் என அறிவித்திருந்தார்.

இதனை அடுத்து தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரணை செய்துவரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் எழுத்துப்பூர்வமாக 15 கேள்விகளை ரஜினிகாந்திடம் கேட்டுள்ளது. இந்த பதினைந்து தேவிகளுக்கும் ரஜினிகாந்த் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து ரஜினியுடனான தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை முடிந்து விட்டதாக தெரிகிறது.

ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட 15 கேள்விகள் என்ன? அதற்கு அவர் கூறிய பதில் என்ன? என்பது குறித்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யும் போது வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version