சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை: கஸ்தூரி டுவிட்டுக்கு பி.ஆர்.ஓ பதில்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது அமெரிக்க பயணம் குறித்து யாருக்கும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவருடைய குடும்பத்தாரும் விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர் பிஆர்ஓ கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதை அடுத்து கஸ்தூரி கேள்வி ஒன்றை தனது டுவிட்டரில் எழுப்பி இருந்தார். கடந்த மே மாதம் முதல் அமெரிக்கா செல்வதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்ற நிலையில் ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? என்றும், உடல்நல குறைவு அவசரம் என்றாலும் அவருடைய உடல் நலத்திற்கு அப்படி என்ன வந்தது என்று கவலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார். மேலும் அரசியலில் இருந்து அவர் திடீரென விலகியதற்கும், அவருடைய அமெரிக்க பயணத்திற்கும் தொடர்பு இருப்பதாக கருத வேண்டிய நிலை இருப்பதால் ரஜினிகாந்த் இதனை விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதன் பின்னர் திடீரென அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள் என்றும் எனது உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது என்றும் நல்ல செய்தியை பிறகு சொல்கிறேன் என்றும் தலைவரை வரவேற்க தயாராகும் தமிழகம் என்றும் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் அல்லது அவருடைய குடும்பத்திலிருந்து யாரும் பேசவில்லை என்றும் எந்தவிதமான விளக்கமும் கொடுக்கவில்லை என்பது தான் நிஜம் என்றும் ரஜினிகாந்தின் பிஆர்ஓ தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி ’என்னை அழைத்துப் பேசியது கங்கை அமரன் அவர்கள் என்றும், அவர் பகிர்ந்த விவரங்களை நான் யாரிடமேனும் சரி பார்க்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version