தமிழ்நாடு

ஆரோக்கியத்துக்கு மிஞ்சின மருந்து இல்லை: ரஜினியின் பொங்கல் வாழ்த்து!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்தில் ஆரோக்கியத்துக்கு மிஞ்சிய மருந்து இல்லை என தெரிவித்துள்ளார்.

தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதும் இன்று காலை முதலே தமிழர்கள் புத்தாடை உடுத்தி புது மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தைத்திருநாள் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும் திரை உலக பிரபலங்களும் தங்களது பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அனைவருக்கும் தனது பொங்கல் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம்! ஒரு கஷ்டமான, ஒரு ஆபத்தான சூழ்நிலையிலேயே வாழ்ந்திட்டிருக்கோம். இந்த கொரோனா நாளுக்கு நாள் அதிகமாகிட்டிருக்கு. இதுலேருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள எல்லா கட்டுப்பாடுகளையும் எல்லாம் நியமங்களையும் கண்டிப்பாக கடைபிடிங்க. ஆரோக்கியத்துக்கு மிஞ்சினது எதுவுமே கிடையாது. அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த பொங்கல் நல்வாழ்த்து டுவிட் வைரலாகி வருகிறது.

Trending

Exit mobile version