சினிமா செய்திகள்

15 நாட்கள் கழித்து புனித் ராஜ்குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!

Published

on

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு 15 நாட்கள் கழித்து ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும், கமல்ஹாசன் உள்பட பல திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புனித் ராஜ்குமார் சமாதி தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மறைவின்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அதன் பின்னர் அவர் சமீபத்தில் தான் டிஸ்சார்ஜ் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் புனித் ராஜ்குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து ஆடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, புனித் ஆத்மா சாந்தி அடையட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

15 நாட்கள் கழித்து புனித் ராஜ்குமார் மறைவுக்கு ரஜினிகாந்த் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதை ஒரு சிலர் கிண்டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version