தமிழ்நாடு

38 மாவட்ட செயலாளர்களை இன்று சந்திக்கின்றார் ரஜினிகாந்த்: சென்னையில் குவிந்த ரசிகர்கள்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க விருப்பதை அடுத்து இன்று காலையே சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக ரஜினிகாந்த் சென்றார் என்பதும் அதன் பின் கடந்த இரண்டு நாட்களுக்கு பின்னர் அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும் அனைத்து மாவட்ட செயலாளர்களை சந்திக்க அவர் திட்டமிட்டார். இதனை அடுத்து 38 மாவட்டச் செயலாளர்களையும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று 38 மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கிறார். அவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவ பரிசோதனைக்கு அமெரிக்காவுக்கு சென்று வந்த பின் மாவட்ட செயலாளர்களை முதல் முதலில் சந்திக்கும் ரஜினிகாந்த் தனது உடல்நிலை பற்றி அவர்களுக்கு விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பிறகு ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பதால் இந்த சந்திப்பின்போது அவர் சில முக்கிய தகவல்களை மாவட்ட செயலாளருக்கு தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஒரு சிலர் வெளியேறி திமுக உள்பட ஒரு சில கட்சிகளில் இணைந்து உள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இன்றைய மாவட்ட செயலாளர்கள் சந்திப்புக்குபின் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version