சினிமா செய்திகள்

ரஜினி வீட்டின் முன் கூடிய ஏராளமான ரசிகர்கள்: கையசைத்துவிட்டு சென்ற ரஜினி!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு அதன்பிறகு வெளியிட்டுள்ள அறிக்கையில் ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுகிறது என்றும், இனிமேல் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால் முன்பு போல் ரஜினி ரசிகர் மன்றமாக மக்கள் நலப் பணிகளுடன் இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து ரஜினி மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரஜினியை காண்பதற்காக அவரது வீட்டின் முன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் போயஸ்கார்டனில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தன்னை சந்திக்க பல ரசிகர்கள் வந்துள்ளதை அறிந்த ரஜினிகாந்த் வீட்டின் பால்கனியில் இருந்து ரசிகர்களை நோக்கி கையசைத்தார். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி பால்கனிக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் கைகாட்டியபோது ’தலைவா’ என்ற ரசிகர்களின் குரல் விண்ணைப் பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version