தமிழ்நாடு
ரஜினி டிஸ்சார்ஜ் பத்தி நாளைக்கு தான் சொல்வோம்: அப்போலோ
ரஜினி எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாம் என்பது குறித்து நாளை முடிவு செய்யப்போவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் அண்ணாத்த படபிடிப்பின் போது உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதில் கொரோனா நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும், இரத்த அழுத்தம் மட்டும் மாறுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் இன்று (டிச 26) மாலை ரஜினியை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று அப்போலோ நிர்வாகம் கூறியிருந்தது. இதனால் ரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள், திரைத்துறையினர் பலரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில், இன்று (டிச.26) மாலை அப்போலோ தரப்பில் இருந்து மீண்டும் ஒரு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரஜினிக்கு தொடர் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும், அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.