சினிமா செய்திகள்

ரஜினியின் கடைசி படத்தை இயக்குபவர்கள் இந்த இருவரா?

Published

on

ரஜினியின் கடைசி திரைப்படத்தை இரண்டு இயக்குநர்கள் இணைந்து இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள ’அண்ணாத்த’ திரைப்படம் அவரது 165-வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் தேசிங்கு பெரியசாமி அல்லது கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவரில் ஒருவர் இயக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகின்றது.

இதனை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 167’ என்ற திரைப்படம் தான் அவரது கடைசி திரைப்படம் என்றும் அந்த திரைப்படத்தை ரஜினிகாந்தின் இரு மகள்களான சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா இணைந்து இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஐஸ்வரியா தனுஷ், ‘3’ மற்றும் ‘வை ராஜா வை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தற்போது லைக்கா புரடக்ஷன் நிறுவனத்திற்காக ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

அதேபோல் சௌந்தர்யா, ‘ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் தற்போது அவர் பொன்னியின் செல்வன் நாவலை வெப்தொடராக இயக்கும் இயக்கும் முயற்சியில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் இணைந்து இயக்கும் படத்தில் நடிக்க ரஜினிகாந்த் ஒப்புக் கொண்டதாகவும் இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்ற ரஜினியிடம் மருத்துவர்கள் இனிமேல் உங்களுக்கு முழு ஓய்வு தேவை என்று கூறி இருப்பதாகவும் அதன் காரணமாகவே அவர் இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் இயக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version