சினிமா செய்திகள்

ரஜினி படத்தை முதன்முதலில் பார்த்த பேரன் வேத்: என்ன செய்தார் தெரியுமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை முதல் முதலில் அவரது பேரன் வேத் பார்த்து முடித்ததும் என்ன செய்தான் என்பதை ரஜினிகாந்த் தனது மகளின் ’Hoote’ செயலியில் குரல் வடிவில் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் ரஜினி மற்றும் அவரது குடும்பத்திற்காக பிரத்யேக காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது.

இந்த படத்தை ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் சௌந்தர்யா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், மருமகன் விசாகன், பேரன்கள் ஆகியோர் பார்த்தனர்.குறிப்பாக சௌந்தர்யாவின் மகன் வேத் முதல் முதலாக ரஜினியின் படத்தை பார்த்ததாகவும், அவர் மிகுந்த உற்சாகத்துடன் படம் முழுவதையும் பார்த்ததாகவும் இந்த படத்தை பார்த்து முடித்ததும் தன்னை கட்டிப்பிடித்துக்கொண்டு மூன்று நான்கு நிமிடம் விடவே இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

இதனை அடுத்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாகவும் என்னுடைய படத்தை முதன் முதலில் பார்த்த பேரன் வேத், இந்த நிகழ்வை மறக்கவே மாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வந்தபோது கலாநிதி மாறன் அவர்கள் காத்திருந்ததாகவும் அவரிடம் நீங்கள் என்ன சார் இங்கு காத்திருக்கிறார்கள்? என்று கேட்டதற்கு உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் என்று கூறியதாகவும், அவ்வளவு பெரிய மனிதர் என்னை பார்ப்பதற்காக காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும் என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்கள் தான் என்று அந்த குரல் பதிவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version