சினிமா செய்திகள்

தாதே சாகேப் பால்கே விருது வழங்கும் விழாவில் ரஜினி-தனுஷ்: வைரலாகும் குடும்ப புகைப்படம்

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ள நிலையில் ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா அரங்கில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

டெல்லியில் இன்று தேசிய விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது என்பதும் அதோடு தாதா சாகேப் விருது பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஜினிகாந்த் அவர்கள் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.அவர் இன்று காலை விழா நடைபெறும் அரங்கிற்கு குடும்பத்தினருடன் சென்ற நிலையில் விழா அரங்கில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் யாத்ரா தனுஷ் ஆகியோர் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்துக்கு தாதா சாகிப் பால்கே விருதும் மற்றும் தனுஷ், விஜய் சேதுபதி உள்பட பலர் விருது பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது வழங்கும் விழா இன்னும் ஒரு சில நிமிடங்களில் டெல்லியில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version