சினிமா செய்திகள்
ரஜினியின் சென்னை வருகையில் திடீர் மாற்றம்: என்ன காரணம்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவுக்கு உடல் பரிசோதனை செய்வதற்காக தனி விமானத்தில் சென்றார் என்பதும் அவருடைய தனி விமானத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது என்பதையும் பார்த்தோம். தனது குடும்பத்தினருடன் அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் அங்கு சில நாட்கள் தங்கி இருந்து உடல் பரிசோதனை செய்து கொண்டார்.
ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருக்கும்போது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் மற்றும் மருத்துவமனையில் இருந்து தனது மகளுடன் வெளியே வரும் போது எடுத்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் இணையதளங்களில் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் நேற்று இரவு அமெரிக்காவில் இருந்து கிளம்பி இன்று அதிகாலை சென்னை வருகிறார் என்று செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை அடுத்து தலைவர் ரிட்டர்ன் என்ற ஹேஷ்டேக் உடன் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது வந்திருக்கும் செய்தியின்படி ரஜினிகாந்த் இன்று சென்னை வரவில்லை என்றும் அவரது சென்னை பயணம் சற்று தாமதமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு இன்று அதிகாலை சென்னை வருவதாக இருந்த நிலையில் திடீரென பயண திட்டம் மாற்றப்பட்டு இன்று மாலை கிளம்பி நாளை அதிகாலை ரஜினிகாந்த் சென்னை வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் இந்த ஒருநாள் தாமதத்திற்கு தனிப்பட்ட காரணங்கள் என்று கூறப்படுகிறது. இருப்பினும் நாளை கண்டிப்பாக அவர் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பியவுடன் அவர் ஓரிரு நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு அதன் பிறகு ’அண்ணாத்த’ படத்தின் டப்பிங் பணியில் ஈடுபடுவார் என்றும் அதன் பின்னர் அடுத்த மாதம் அவர் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.