தமிழ்நாடு

ரஜினியால் அதிமுக-ஐ எதுவும் செய்ய முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

Published

on

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவிப்பினை வெளியிட்ட பிறகு அது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆனது. அன்மையில் ரஜினிக்கு எதிராக முரசொலி நாளிதழில் கட்டுரை எழுதிய திமுகவும் தங்களது கட்சியில் உள்ள அவரது ரசிகர்கள் வாக்கு வங்கி எங்குப் போய்விடுமோ ரஜினிகாந்திடம் சமாதான தூது விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ரஜினி அரசியலுக்கு வருவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அதிமுக வாக்கு வங்கியை ரஜினியால் எதுவும் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினியால் மட்டுமல்ல, யாராலும் அதிமுகவின் வாக்குவங்கியைச் சிதைக்க முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version