சினிமா
தர்பார் சூட்டிங் முடிந்தது… இமயமலை புறப்பட்டார் ரஜினி காந்த்…
தயானந்தா ஆசிரமத்தில் உள்ள ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட் ரிஷிகேஷில் உள்ள தயானந்த ஆசிரமத்தில் ஓய்வெடுத்து வருகிறார் நடிகர் ரஜினி
கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்புவரை ஒவ்வொரு படத்தின் சூட்டிங் முடிந்த பின்பும் இமயமலை செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். உடல்நலக் குறைவு காரணங்களால் தொடர்ந்து இமயமலை செல்வதை தவிர்த்த ரஜினிகாந்த் 8 ஆண்டுகள் கழித்து 2.0 மற்றும் காலா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து இமயமலை சென்றார். தற்போது “தர்பார்” படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து நடிகர் ரஜினி இமயமலைக்கு பயணம் சென்றுள்ளார்.