சினிமா செய்திகள்
’நாங்கள் இருக்கிறோம் தலைவா’: தனுஷ் விவாகரத்து அறிவிப்புக்கு பின் ரஜினிக்கு ரசிகர்கள் ஆறுதல்
நடிகர் தனுஷ் நேற்று திடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்ட பின் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ’நாங்கள் இருக்கின்றோம் தலைவா’ என ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ரஜினி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருவது ட்ரெண்டாகி வருகிறது.
18 ஆண்டு கால மண வாழ்க்கை முடிந்துவிட்டதாக தனுஷ் நேற்று அறிவித்தது ரஜினி ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவலையடையச் செய்தது என்பதும் இது குறித்து ஆறுதல் டுவிட்டுக்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
’தலைவா’ என்றும் ’நாங்கள் இருக்கின்றோம் தலைவா’ என்றும் ’ரஜினிகாந்த்’ என்றும் பல்வேறு ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே விவாகரத்திற்கு என்ன காரணமாக இருந்தாலும் இருக்கலாம், அதை பற்றி நமக்கு ஆராய்ச்சி தேவையில்லை என்றும், அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விஷயம் என்றும், அவர்களின் படங்களை மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்யக்கூடாது என்றும், ரஜினி ரசிகர்கள் மிக மெச்சூரிட்டியாக பதிவு செய்து வந்தனர்.
மேலும் கணவன் மனைவி பிரிவு எவ்வளவு வலியானது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும் என்றும், இருப்பினும் அவர்களது தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து ஆச்சரியப்படுத்தினார்.
இருப்பினும் ரஜினி குடும்பத்தினர் இது குறித்து கவலையாக இருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள் ’கவலைப்படாதீர்கள் நாங்கள் இருக்கிறோம், எவ்வளவு பிரச்சனை வந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்\ என்றும் அன்புடன் செய்த பதிவுகள் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் இளைய மகள் விவாகரத்து பெற்று அதன்பின் தற்போதுதான் மீண்டும் திருமணம் செய்து வாழ்க்கையில் செட்டிலாகி நிலையில் திடீரென மூத்த மகளுக்கு இப்படி ஒரு நிலைமை வந்துள்ளது எந்த ஒரு பெற்றோருக்கும் மன அழுத்தம் இருக்கத்தான் செய்யும் என்றும் ஆனால் ரசிகர்களின் ஆறுதல் அந்த மன அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.