தமிழ்நாடு

எந்த ஏழு பேர்?: ரஜினியின் பேச்சால் சர்ச்சை!

Published

on

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த் எந்த ஏழு பேர் என பதில் கேள்வி எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்திடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக அரசு சார்பில் எழுபட்ட கடிதம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, எந்த ஏழு பேர் என ரஜினிகாந்த் பதிலளித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் ராஜீகாந்தி கொலை வழக்கு பற்றி எடுத்து கூறியும் ரஜினிகாந்த் எனக்கு தெரியாது என கூறினார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு தற்போது அரசியல் ரீதியாக விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version