கேலரி
விருதை கையில் பிடித்தபடி ரஜினியும், தனுஷ் – தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்திற்கு திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய பட விழாவில் வழங்கப்பட்டது. எனவே, ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விழா அரங்கில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஏற்கனவே வெளியாகி வைரலாகியது. நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் இன்று காலை விழா நடைபெறும் அரங்கிற்கு குடும்பத்தினருடன் சென்ற நிலையில் விழா அரங்கில் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் யாத்ரா தனுஷ் ஆகியோர் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் வைரலாகியது.
அதன்பின் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதையும், ரஜினி தாதா சாகேப் பால்கே விருதையும் பெற்றனர். தனக்கு விருது அளித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த அவர் இந்த விருதை தனது குருநாதர் பாலச்சந்தருக்கு சமர்ப்பணம் செய்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், இது ரஜினியும், தனுஷும் விருது கையில் வைத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதேபோல், தனது தலைவர் ரஜினி விருது வாங்கிய அதே விழாவில் தானும் விருது வாங்கியதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.