இந்தியா
ராஜேஷ் குப்தா என்பவரின் புதிய செருப்பைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்!
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் டி.ஹெச் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் குப்தா(55), என்பவர் பேரிஸ் பகுதியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் உடல் நிலைகுறைபாடு காரணமாக ராஜேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ரத்த பரிசோதனை நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு மருத்துவரை பார்த்துவிட்டு வெளியே வந்து பார்த்தால் அவர் வெளியே விட்டு, விட்டுச் சென்ற இடத்தில் செருப்புக் காணாமல் போயிருந்தது.
தனது மனைவி வாங்கிக் கொடுத்த புதிய செருப்பு திருட்டுப்போயிற்றே என ஆதங்கப்பட்ட ராஜேஷ் குப்தா, தனது செருப்பைக் கண்டுபிடித்துத் தரக்கோரி தண்டையார் பேட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் குப்தா(55), தொழிலதிபரான இவர், தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், இரண்டு நாட்களுக்கு முன், ரூ.800 மதிப்பில் புதிய செருப்பை வாங்கியதாகவும், அதை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். எனது செருப்பைத் திருடியவர்களைக் கண்டுபிடித்துச் செருப்பை மீட்டுத் தர வேண்டும் எனப் புகார் தெரிவித்தார்.
தண்டையார்பேட்டை காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.