தமிழ்நாடு

ரூ.3 கோடி மோசடி புகார்: ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Published

on

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் மூன்று கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வேலை வாங்கி தருவதாக ரூபாய் 3 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான மோசடி புகாரில் ஆதாரங்கள் உள்ளது என காவல்துறை இன்றைய வழக்கு விசாரணையின்போது தெரிவித்தது.

மேலும் முன்னாள் அமைச்சரின் உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் பார்த்த நடந்ததாகவும் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் மனு முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்துள்ள நிலையில் அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version