தமிழ்நாடு

ராஜஸ்தான் இளம்பெண் கும்பகோணத்தில் பலாத்காரம்!

Published

on

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கும்பகோணத்தில் வங்கி பணிக்கு வந்துள்ளார். அவரை கும்பகோணத்தை சேர்ந்த நான்கு பேர் ஆட்டோ டிரைவர் துணையுடன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வங்கி ஒன்றில் வேலை கிடைத்துள்ளது. அதற்கான பயிற்சிக்கு அவர் கடந்த 1-ஆம் தேதி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து தான் செல்ல வேண்டிய விடுதிக்கு செல்ல ஆட்டோ ஒன்றில் ஏறியுள்ளார். ஆனால் அந்த ஆட்டோ வேறு வழியில் செல்ல அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அந்த இளம்பெண்ணை கும்பகோணம் செட்டி மண்டபம் பைபாஸ் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த வாலிபரிடம் தனது விடுதிக்கு கொண்டு விட உதவிகேட்டுள்ளார் இளம்பெண். ஆனால் அந்த வாலிபர் இளம்பெண்ணை மறைவான இடம் ஒன்றுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்து அவர்களும் பலாத்காரம் செய்தனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பலாத்காரம் செய்த 4 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இளம்பெண்ணை இறக்கிவிட்டு சென்ற ஆட்டோ டிரைவரையும் போலீசார் கண்டுபிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பலாத்கார சம்பவம் திட்டமிட்டு நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version