கிரிக்கெட்
கொரோனா தடுப்பு நிதியாக ரூ.7.5 கோடி நிதியுதவி செய்த ஐபிஎல் அணி!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி இருக்கும் நிலையில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தொழிலதிபர்கள், திரையுலகினர், மற்றும் விளையாட்டு வீரர்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே பேட் கம்மின்ஸ் மற்றும் பிரட்லீ ஆகிய இருவரும் தங்களது சார்பில் கொரோனா தடுப்பு நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கினார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை கொரோனா தடுப்பு நிதியாக மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 7.5 கோடி என்பது குறிப்பிடதக்கது.
இன்று ராஜஸ்தான் அணி மும்பை அணியுடன் மோத இருக்கும் நிலையில் போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்த நிதியுதவி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் இதே போல் மற்ற ஐபிஎல் அணிகளும் தாராளமாக கொரோனா தடுப்பு நிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.