கிரிக்கெட்

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி எடுத்த அதிரடி முடிவு!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்றும் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் டாஸ் போடப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் டெல்லி அணி களமிறங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் விளையாடும் டெல்லி அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று உள்ளது என்பதால் இரண்டாவது வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக முயற்சிக்கும். அதே போல் ராஜஸ்தான் அணி ஏற்கனவே ஒரு போட்டியில் விளையாடி நூலிழையில் தோல்வியடைந்துள்ளதால் முதல் வெற்றியை பதிவு செய்ய தீவிரமாக முயற்சிகளில் ஈடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் அணியில் விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் பின்வருமாறு

ராஜஸ்தான் அணி: பட்லர், வோஹ்ரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்.

டெல்லி அணி: பிரித்வி ஷா, ஷிகர் தவான், ரஹானே, ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், அஸ்வின், ரபடா, டாம் கர்ரன், அவ்னேஷ் கான்.

seithichurul

Trending

Exit mobile version