கிரிக்கெட்

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்திய உனாகட்: டெல்லி அணி திணறல்

Published

on

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை ராஜஸ்தான் அணியின் உனாகட் வீழ்த்தியதை அடுத்து டெல்லி அணி தற்போது திணறி வருகிறது.

இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதி வரும் நிலையில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து சற்று முன் டெல்லி அணியில் களமிறங்கிய நிலையில் பிரித்விஷா மற்றும் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடினர்.

அந்த அணி 2-வது ஓவரில் பிரித்வி ஷா விக்கெட்டையும் 4-வது ஓவரில் தவான் விக்கெட்டையும் இழந்தது, 2 விக்கெட்டுகளையும் உனாகட் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது . பிரித்விஷா 2 ரன்களும் ஷிகர் தவான் 9 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளனர் என்பதும் தற்போது கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் ரஹானே விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன் வரை டெல்லி அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு விக்கெட்டுக்க்ளை டெல்லி அணி இழந்தாலும் ஸ்டோனிக்ஸ், வோர்ஹ், லலித், அஸ்வின் உள்பட ஒரு சில பேட்ஸ்மேன்கள் இருப்பதால் அந்த அணி நல்ல ஸ்கோரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version