கிரிக்கெட்

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த அதிரடி முடிவு!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்ற நிலையில் அந்த அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுமே இதுவரை 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி மற்றும் 3 தோல்விகளை பெற்றுள்ளது. அதுமட்டுமன்றி கடைசி இரண்டு இடங்களான 7 மற்றும் 8வது இடத்தில் இந்த இரு அணிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் வெல்லும் அணி கூடுதலாக இரண்டு புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் உயர வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று விளையாடும் இரு அணி வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:


ராஜஸ்தான் அணி: பட்லர், யாசாஷ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ஷிவம் டூபே, ரியான் பராக், கிறிஸ் மோரிஸ், ராகுல் திவேட்டியா, உனாகட், சேட்டன் சகாரியா, முஸ்தபா ரஹ்மான்

கொல்கத்தா: ரானா, கில், ராகுல் திரிபாதி, இயான் மோர்கன், சுனில் நரேன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரு ரஸல், பாட் கம்மின்ஸ், ஷிவம் மவி, பிரதிஷ் கிருஷ்ணா, வருண் சக்கரவர்த்தி

Trending

Exit mobile version