இந்தியா
மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா: ஏற்கனவே மனைவிக்கும் பாதிப்பு!
![ashok gehlot1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/04/ashok-gehlot1.jpg)
அப்பாவி பொதுமக்கள் மட்டுமன்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் என்பவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏற்கனவே ராஜஸ்தான் முதல்வரின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது ’தனது மனைவி சுனிதா அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதால் வீட்டில் நான் தனிமைப்படுத்திக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனக்கு கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அவர்கள் வீட்டில் இருந்தபடியே அலுவல்களைக் கவனித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் மேலும் ஒரு மாநில முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.