கிரிக்கெட்

ராஜஸ்தானுக்கு 2வது வெற்றி: கொல்கத்தாவை எளிதில் வீழ்த்தியது!

Published

on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தாவை ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதில் வீழ்த்தியது.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்தது என்பதும் ராகுல் திரிபாதி 36 ரன்களும் தினேஷ் கார்த்திக் 25 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் 134 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கடைசி வரை அவுட் ஆகாமல் 42 ரன்கள் எடுத்திருந்தார் என்பதும் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கிரிஸ் மோரிஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று மதியம் 03.30 மணிக்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியும் 07.30 மணிக்கு ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version