உலகம்

மகிந்தா ராஜபக்சே குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சமா?

Published

on

இலங்கையில் இருந்து தப்பிய மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை பிரதமர் ராஜபக்சவின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பதும் இதன் காரணமாக ராஜபக்சேவின் மகன், மருமகள் உள்பட அவரது குடும்பத்தினருக்கு ஹெலிகாப்டரில் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் ராஜபக்சவின் குடும்பத்தினர் இந்தியாவில்தான் தஞ்சமடைந்து இருப்பதாகவும் இந்தியாவில் ரகசிய இடத்தில் இந்திய அரசின் பாதுகாப்பில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களிலும் இலங்கையின் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆனால் இலங்கைக்கான இந்திய தூதரகம் இதனை மறுத்துள்ளது. இலங்கை அரசியல்வாதிகள் யாரும் இந்தியாவில் தஞ்சம் அடைய வில்லை என்றும் இது குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என்றும் கூறப்பட்டுள்ளது.

 

Trending

Exit mobile version