சினிமா செய்திகள்

ஜெய்ப்பூரில் கோலாகலமாக நடந்து முடிந்த ராஜமெளலி மகன் திருமணம்!

Published

on

பாகுபலி பட இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயனுக்கும் கர்நாடக இசை பாடகி பூஜா பிரசாத்துக்கும் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

முன்னதாக, நடைபெற்ற மெஹந்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட டோலிவுட் நடிகர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்கள் குத்தாட்டம் போட்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதில், பாகுபலி நாயகன் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவும் நடனமாடினார்கள். ஜூனியர் என்.டி.ஆர், ராணா டகுபதி, சுஷ்மிதா சென் போன்ற பல பிரபலங்களும் திருமணத்துக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

பல நாட்களாக பூஜாவை காதலித்து வந்த கார்த்திகேயன் கடந்த செப்டம்பரில் பெரியோர்கள் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
4]

seithichurul

Trending

Exit mobile version