சினிமா செய்திகள்

அஜித்தின் முடிவுக்கு தலை வணங்குகின்றேன்: எஸ்.எஸ்.ராஜமெளலி புகழாரம்

Published

on

அஜித்தின் முடிவுக்கு தலை வணங்குவதாக பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் தெரிவித்துள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த எஸ்.எஸ்.ராஜமெளலி, ’ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தற்செயலாக அஜித்தை சந்தித்ததாக கூறினார்.

அங்கு உள்ள உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த பக்கம் தற்செயலாக வந்த அஜித் தன்னை பார்த்ததாகவும் உடனே தன்னிடம் நலம் விசாரித்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனது மனைவி வந்தவுடன் அவருக்கு அஜித்தை அறிமுகம் செய்து வைத்தேன் என்றும் அதனை அடுத்து தனது மனைவி மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

மேலும் அஜித்துடன் உரையாடியபோது தல என்று தன்னை யாரும் அழைக்க வேண்டாம் என்று நீங்கள் அறிக்கை விட்டதற்காக உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன் என்று அஜித்திடம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் மற்றும் அஜித் நடித்த ‘வலிமை’ ஆகிய இரண்டு திரைப்படமும் ஒரு வார இடைவெளியில் வெளியாக இருக்கும் நிலையில் அஜித்தை புகழ்ந்து ராஜமௌலி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version