சினிமா செய்திகள்
ராஜமெளலி ரெடி… ஓகே சொல்வாரா ரஜினி?
பாகுபலி இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயனின் திருமணம் சமீபத்தில் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், தற்போது, ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் வடமாநில டிவி ஒன்றுக்கு பேட்டியளித்த ராஜமெளலியிடம் கமல், ரஜினி இந்த இருவரில் யாரை இயக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சந்தேகமே இல்லாமல் ரஜினி சார் தான் என ராஜமெளலி தெரிவித்தார்.
மேலும், ரஜினியை வைத்து தான் படம் இயக்கினால், ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் விசில் சத்தத்தால் தியேட்டர் கலகலக்கும் எனவும் தெரிவித்தார்.
ஷங்கரின் பிரம்மாண்ட படங்களான சிவாஜி, எந்திரன், 2.0வில் ரஜினி நடித்துள்ளார். பாகுபலி போன்ற ஒரு சரித்திரப்படத்தில் ராஜமெளலி இயக்கத்தில் ரஜினி நடிக்க சம்மதித்து விட்டால், அது இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் வசூலையும் ஈட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ராஜமெளலியின் இந்த ஆசைக்கு ரஜினியும் ரஜினியின் உடல்நிலையும் ஓகே சொல்லுமா?