சினிமா செய்திகள்
ராஜமெளலி மகன் கார்த்திகேயாவுக்கு நாளை டும் டும் டும்!
பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி உலகப் புகழ் பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயவுக்கும் அவரது நீண்ட நாள் காதலி பூஜா பிரசாத் ஆகிய இருவருக்கும் நாளை (டிசம்பர் 30) ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெறவிருக்கிறது.
கடந்த செப்டம்பர் மாதம் தனது நீண்ட நாள் காதலியான பூஜா பிரசாத்துடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் கார்த்திகேயா. டோலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இவர்களது நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.
இந்நிலையில், நாளை ஜெய்ப்பூர் அருகே உள்ள குகாஸ் எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் கார்த்திகேயா – பூஜா பிரசாத் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் நாளை காலை திருமணம் நடைபெறவுள்ள நிலையில், இந்தியாவின் பிரபலங்கள் பலரும் ஜெய்ப்பூருக்கு படையெடுத்து வருகின்றனர்.