இந்தியா
பாஜகவின் அரசியல் பலிகடா புல்வாமா தாக்குதல்: விசாரணை கோரும் ராஜ் தாக்ரே!
கடந்த 14-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் துணை ராணுவப்படை வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தீவிரவாத தாக்குதலில் பலியாகினர். இந்த தீவிரவதா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றாலும் இதில் பாஜகவின் அரசியல் இருப்பதாக மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரவேண்டுமானால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கோரிக்கை விடுத்துள்ளது அரசியல் அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பாஜகவை குற்றம்சாட்டி ராஜ் தாக்ரே கூறியதாவது, 40-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் அரசியல் பலிகடாக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியும் ராணுவ வீரர்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால் மோடியின் ஆட்சியில் இது அடிக்கடி நடக்கிறது. பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற தகவல்கள் வெளிவந்தபின்னரும் பிரதமர் மோடி படப் பிடிப்பில் இருந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் இருக்கும் மர்மங்கள் விலக வேண்டுமானால் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்கு பாஜக தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
ராஜ் தாக்கரே அவ்வபோது மிமிக்ரி செய்துகொண்டிருப்பார். இப்போது ராகுல் காந்தியின் குரலில் பேசிக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான் என பாஜக செய்தித் தொடர்பாளார் மாதவ் பண்டாரி தெரிவித்துள்ளார்.