சினிமா செய்திகள்
ஷில்பா ஷெட்டி கணவரிடம் ரூ.9 கோடி மதிப்புள்ள ஆபாச வீடியோக்கள்: அதிர்ச்சி தகவல்!
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவிடம் இருந்து 9 கோடி மதிப்புள்ள ஆபாச வீடியோக்களை போலீசார் கைப்பற்றி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சமீபத்தில் ஆபாச வீடியோக்களை தயார் செய்து அதை வெளிநாட்டுக்கு விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் காவல்துறை வசம் கிடைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ராஜ்குந்த்ரா ஏராளமான ஆபாச வீடியோவை தயாரித்து ரகசிய இடத்தில் வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்தபோது ரூபாய் 9 கோடி மதிப்புள்ள 119 ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் ராஜ்குந்த்ராவிடம் விசாரணை நடந்து வருவதாகவும் இது போன்ற வேறு வீடியோக்களை அவருக்கு வைத்திருக்கிறாரா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் ஆபாச பட விவகாரம் காரணமாக ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ்குந்த்ரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், கணவர் ராஜ்குந்த்ராவை ஷில்பாஷெட்டி நிரந்தரமாக பிரிய முடிவு செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.