இந்தியா

டாப்லெஸ் ஆக நடிக்க ஆட்கள் தேவை: ராஜ் குந்த்ரா நிறுவனம் வெளியிட்ட விளம்பரம்!

Published

on

டாப்லெஸ் ஆக நடிக்க இளம் பெண்கள் தேவை என நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நிறுவனம் இமெயில் விளம்பரம் ஒன்று செய்திருந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆபாச படங்கள் தயாரித்து அதனை வெளிநாட்டு செய;ஒகளுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின்பேரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த 19ஆம் தேதி மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஆபாச திரைப்படங்கள் தயாரித்தற்கான ஆதாரங்களை போலீசார் திரட்டிய பின்னரே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராஜ்குந்த்ரா ஆவின் நிறுவனம் அனுப்பிய இமெயிலில் தாங்கள் தயாரிக்கும் திரைப்படம் ஒன்றுக்கு டாப்லெஸ் ஆக நடிக்க ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டிருந்தது குறித்த ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளது.

இந்த இமெயில் ஆதாரத்தை கைப்பற்றிய போலீசார் இதனடிப்படையில் தற்போது வழக்கை நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version