சினிமா

இந்த நாளை மறக்கவே மாட்டேன்.. கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் ரைசா!

Published

on

சென்னை: பியர் பிரேமா காதல் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து அந்த படத்தில் அறிமுகம் ஆகியுள்ள நடிகை ரைசா உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

ரைசாவும் ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்று, நண்பர்கள் ஆனவர்கள். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த சில நாட்களில் இவர்கள் இருவரும் பியர் பிரேமா காதல் படத்தில் ஒப்பந்தம் ஆனார்கள்.

கண்ணீர் விட்டு அழுத பிக்பாஸ் ரைசா!

படத்தின் டிரைலர், டீசர் தொடங்கி பாடல் வரை அனைத்தும் படு ஹிட். இப்போது படமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

இன்று படம் வெளியாகி உள்ள நிலையில் சென்னையில் படம் பார்த்த ரைசா கண்ணீர்விட்ட படி வெளியேறி இருக்கிறார். இந்த நாளை வாழ்வில் மறக்கவே மாட்டேன் என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version