தமிழ்நாடு
விடாமல் பெய்த அடைமழையால் தலைமை செயலகத்திற்குள் புகுந்த தண்ணீர்: வீடியோ வைரல்
சென்னையில் கடந்த சில மணி நேரமாக விடாமல் பெய்த அடைமழை காரணமாக தலைமைச் செயலகத்தில் தண்ணீர் புகுந்து விட்டதால் அதிகாரிகள் அவசர அவசரமாக தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று மதியம் திடீரென மேகம் திரண்டு மழை பெய்ய ஆரம்பித்தது என்பதும் ஒரு சில பகுதிகளில் 5 மணி நேரமாகவும், சில பகுதிகளில் இரண்டு மணி நேரமாகவும் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை எழும்பூர், சேத்துப்பட்டு, சென்ட்ரல், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. மெரினா அருகே 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. இன்னும் 150 மில்லி மீட்டர் அளவை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் கனமழை காரணமாக தலைமைச் செயலகத்தில் திடீரென தரைத்தளத்தில் உள்ள அறைகளில் தண்ணீர் புகுந்து உள்ளதை அடுத்து அந்த அறையில் இருந்த அதிகாரிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
அதிகபட்சமாக சென்னை எம்ஆர்சி நகரில் 120 மில்லி மீட்டர் வரை தற்போது மழை பெய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மீனம்பாக்கத்தில் 80 மில்லி மீட்டர், நுங்கம்பாக்கத்தில் 25 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இன்னும் விடாமல் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மழைநீர் வீடுகளுக்கும், அலுவலத்திற்குள்ளும் புகுந்துவிடும் அபாயம் இருப்பதாக கருதப்படுகிறது.
With rain lashing out since aftn. Water logging inside TN secretariat.. @rameshibn pic.twitter.com/3Yqxd6PXCs
— Stalin SP (@Stalin__SP) December 30, 2021