தமிழ்நாடு
அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம் மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது என்பதும் இந்த கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக பெய்த கன மழையால் சென்னை உள்பட பல நகரங்களில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொதுமக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதும் தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்தில் இரண்டு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்பட மற்ற மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் இனி தமிழகத்திற்கு கனமழை இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ஆறுதலுக்குரிய ஒருரு தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.