தமிழ்நாடு
தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மீண்டும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் கனமழை பெய்தது என்பதும் சென்னை உள்பட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் திடீரென டிசம்பர் இறுதியில் சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்தது என்பதும் இதனால் மீண்டும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டெல்டா மாவட்டங்கள் உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கடலோர பகுதிகளில் இன்று மற்றும் நாளை மிதமான மழை வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.