தமிழ்நாடு
அடுத்த 5 நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
![rain2 - Bhoomitoday rain](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/12/rain2.jpg)
அடுத்த 5 நாட்களில் தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும் என்ற அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஜனவரி 17, 18 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் மற்றும் டிசம்பரில் பெய்த மழையின் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது என்பதும் இதனால் வரும் கோடையில் தமிழகம் முழுவதும் குடிதண்ணீர் மற்றும் விவசாயத்திற்கு எந்த விதமான தண்ணீர் பிரச்சனையும் இருக்காது என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.