தமிழ்நாடு

இன்றும் நாளையும் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்? வானிலை ஆய்வு மையம்!

Published

on

இன்றும் நாளையும் எந்தெந்த பகுதியில் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் முழுவதும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது என்பதை பார்த்தோம். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன மழை கொட்டி தீர்த்தது என்பதும் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி விட்டது என்பதும் சென்னை உள்பட பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தற்போது மீண்டு உள்ள நிலையில் மீண்டும் இன்று மற்றும் நாளை மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை அதாவது டிசம்பர் 8-ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது.

ஏற்கனவே டெல்டா மாவட்டங்களில் மழை அளவுக்கு அதிகமாக பெய்துள்ள நிலையில் மேலும் மழை உள்ளது என்று அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version