தமிழ்நாடு

சென்னையின் பல பகுதிகளில் மழை: 2 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published

on

சென்னையின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வரும் நிலையில் இன்னும் இரண்டு மணிநேரத்தில் சென்னை உள்பட ஒருசில மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று அதிகாலை முதல் சென்னை தேனாம்பேட்டை, அண்ணா சாலை, எழும்பூர், சைதாப்பேட்டை, கிண்டி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே மேற்கண்ட மாவட்டங்களில் வெளியே செல்பவர்கள் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version